கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

டெல்லியில்  பிரதமர் ர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மோடி 3வது முறை பிரதமாராகி ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.

இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 25-ம் தேதி இதற்காக டில்லி செல்ல வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா மாநிலத்திற்கான மத்திய நிலுவைத்தொகை மற்றும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. நிதிகள் குறித்த பிரச்சினையை எழுப்ப உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மம்தா பானர்ஜி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.,

நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்கல் மற்றும் பல மத்திய அமைசர்கள் பங்கேற்க உள்ளனர்.