புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்த தொகுதியான ஏனாமில் போட்டியிட போவதில்லை என அண்மையில் அறிவித்தார்.  அமைச்சா் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினா் யாரும் வரும் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

திருப்பதி தேவஸ்தான இயக்குநா் பதவிக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டு வந்தார். இந் நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவ் தமது அமைச்சா் பதவியை ராஜினாமா செய்த நிலையில், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். முன்னதாக, மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தொடா்ந்து மோதல் போக்கும் நிலவி வந்தது, குறிப்பிடத்தக்கது.