சென்னை:  சென்னை  எழும்பூரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக முக்கிய ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 03 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்/ முடிவடையும்.

சென்னை கடற்கரை – மும்பை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22158), 04 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரை – ஐதராபாத் சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12759), 04 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

ஐதராபாத் – சென்னை கடற்கரை சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12760), 03 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு வந்து சேரும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]