கோட்டயம்
கேரளாவில் எட்டுமானூர் கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்த போது பாகன் கட்டிடத்தில் ஏறி உயிர் தப்பி உள்ளார்
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது எட்டுமானூர் கோவில். இந்தக் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. அதற்கான யானை ஒன்று அழத்து வரப்பட்டது. கேரளா கோவில் திருவிழாவில் யானைகள் கலந்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது.
மக்கள் கூட்டத்தில் புகுந்த யானை அங்கிருந்த கடைகள் போன்றவற்றை அடித்து நொறுக்க ஆரம்பித்தது. மக்கள் அனைவரும் பயத்தில் அங்கும் இங்கும் ஓடினார்கள். அந்த யனை மீது அமர்ந்திருந்த பாகனால் யானையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கோவில் கட்டிடத்தில் ஏறி அங்கிருந்து பாகனை நோக்கி ஒரு கயிறை வீசினர்.
அந்தக் கயிற்றை பிடித்துக் கொண்ட யானைப்பாகனை அந்த இளைஞர்கள் கயிற்றுடன் சேர்த்து மேலே தூக்கினார்கள். மெல்ல ஏறிய அந்த யானைப்பாகன் கோவில் கட்டிடத்தில் ஏறி உயிர் தப்பி உள்ளார்.