டில்லி

ம்மை எம் பி பதவியில் இருந்து நீக்க நெறிமுறைகள் குழுவுக்கு அதிகாரம் இல்லை என மகுவா மொய்த்ரா கூறி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.  எனவே நெறிமுறைக் குழுவின் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மகுவா மொய்த்ரா செய்தியாளர்களிடம்,

”இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை. நெறிமுறைகள் குழு ஆதாரம் இன்றி செயல்பட்டுள்ளது. என்னைப் பேசவிடாமல் செய்வதன் மூலம் அதானி விவகாரத்தை திசை திருப்பிவிடலாம் என மோடி அரசு நினைக்கலாம். அதானி உங்களுக்கு முக்கியம்.

எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான ஆயுதமாக இந்தக் குழு மாறியுள்ளது. ரூல் புக்கில் உள்ள அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியுள்ளது. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை அடிபணியவைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள்”

என்று கூறி உள்ளார்.