சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டிஜிபி  பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில்,  தமிழ்நாடு டிஜிபி (DGP) நியமன விவகாரத்தில் மத்திய அரசுடன் (மற்றும் யுபிஎஸ்சி-யுடன்) நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. மே 29, 2026 அன்று, எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய முந்தைய டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 29, 2025 அன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 

அவருடைய ஓய்வுக்குப் பிறகு, தமிழக காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் செய்யப்பட்டன. மேலும் டிஜிபி பதவிக்கு திமுக அரசு தங்களுக்கு ஆதரவான நபரையே பணியமர்த்த முடிவு செய்தது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரிகளிடையே  எதிர்ப்பு எழுந்தது.
மேலும்,  டிஜிபி-யை நியமனம் விவகாரத்தில்,  மாநில அரசுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி (UPSC)-க்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.பொறுப்பு டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரையை முறையாகப் பின்பற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஜி.வெங்கட்ராமன் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பொறுப்பு (Acting) டிஜிபிக்களாக செயல்பட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாடு  (அப்போதைய திமுக) அரசை உச்ச நீதிமன்ற கண்டித்தது.  : நிரந்தர டிஜிபி-யை நியமிக்காமல் ‘பொறுப்பு’ டிஜிபிக்களை நியமிப்பது உச்ச நீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழிகாட்டுதல்களுக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,  மாநில அரசு யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய திருத்தப்பட்ட பட்டியலிலிருந்து 3 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், மகேஷ் குமார் அகர்வால் (1994-பேட்ச் ஐபிஎஸ்) முழு நேர டிஜிபி-யாக நியமிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அவரை தமிழ்நாடு அரசு புதிய டிஜிபி ஆக நியமனம் செய்துள்ளது. தேர்தல் நேரத்தில்  டிஜிபியாக   பணியமர்த்தப்பட்ட  சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய டிஜிபியாக  மகேஷ் குமார் அகர்வால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ் குமார் அகர்வால்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

முன்னதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் எனப்படும் ஆயுதப் படை கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றி உள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னையில் இவரின் சிறப்பான நிர்வாகம், பலரின் பாராட்டுதல்களை பெற்றது.

தமிழ்நாட்டில், முதலில் தேனி மாவட்ட எஸ்பியாக பணியில் சேர்ந்தவர்,  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை  மாவட்ட காவல்துறை ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை காவல் ஆணையர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் என பல பதவிகளில்  இருந்தர். தற்போது டிஜிபியாக பணி உயர்வு பெற்றுள்ளார்.

அவருக்கு அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

[youtube-feed feed=1]