மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிட்டிக்கல் கேர் எனப்படும் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்ட நோயாளிகளும், மருத்துவர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.  இதுகுறித்து தீ அணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.  இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியிலும், மருத்துவமனைக்குள் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பல நோயாளிகள் உடடினயாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொன்று சென்று சேர்க்கப்பட்டதாகவும்,    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.