மும்பை: மகாராஷ்டிராவில் ஷீரடி கோவிலுக்கு சென்ற பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 10 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் – சீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் சீரடி சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பக்தர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களில்  7 பெண்கள்  3 ஆண்கள் உள்பட 10 பேர் என்பதும், அவர்கள் ஷீரடிக்கு  சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.