நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், மகாபாரத நாடக தொடரில் நடித்த பிரபல நடிகர் சதீஷ் கவுல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற மகாபாரத கதைத் தொடரில் இந்திரன் கதாபாரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் லுதியானாவில் உள்ள மருத்துவமனையில் சதீஷ்கவுல் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.