இசைஞானி இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருவரும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலைத்துறை மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த இவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா ஒரு தலைசிறந்த படைப்பாளி அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. ஏழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து சாதனை படைத்துள்ளார். அவரது வாழ்க்கை தலைமுறைகளை கடந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.