மதுரை : உடல்நலம் பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வயது முதிர்வு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமடங்களில்  ஒன்று மதுரை  மடம். இதற்கு  தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இந்த மடத்திற்கு மதுரை ஆதீனம் என்று அழைக்கப்படும் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் தலைவராக உள்ளார். இவர் 292வது ஆதீனமாவார். இந்த மடத்துக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. இந்த மடத்தை கைப்பற்றும் நோக்கில், சர்ச்சைக்குரியை சாமியார் நித்தியானந்தா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவரை விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.