சென்னை: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான மத்திய குற்றப்பிரிவு  ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் செயல்ப்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓசன் லைஃப் ஸ்பேஷஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர்.  பின்னர் பிரிந்துமு விட்டனர். இந்த நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர், அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது.  மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும்,   கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்தது.

இதை எதித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும்,  அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, ஓசன் லைஃப் ஸ்பேஷஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர்.  பின்னர்  , கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும் இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், இருவருக்கும்  இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.கே. பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாக ஸ்ரீராம் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எஸ்.கே.பீட்டர் மீதான வழக்கை கடந்த பிப்ரவரி மாதம்  ரத்து செய்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறையினரின் வழக்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.