சென்னை

வரும் 8 ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

வட கிழக்கு பருவ மழை தமிழகம் தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையம் மத்திய கிழக்கு அரபிக்கடலில் மீண்டும் வருகிற 8 ஆம்  தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதனால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.