திருப்பதி

விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும்.நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதல்  பக்தர்கள் தரிசனத்திற்காகத் திருமலையில் குவிந்தனர்.பக்தர்கள் வைகுந்தம் க்யூ வளாகம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர்.

மேலும் இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர். கோவிலில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்குக் குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நேற்று திருப்பதியில் நேற்று 84,430 பேர் தரிசனம் செய்து அதில் 38, 662 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தினர் நேற்று .ரூ 3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.