டெல்லி:
டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 2,40,842 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,65,30,132 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 மணிநேரத்தில் 3,741 பேர் கொரோனாவால் பலியாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில் தலைநகர் டெல்லியில்  கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்  தொற்று பரவல் குறைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 2,260 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.