தஞ்சாவூர்
இன்று [இம்மஒ நல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை வடத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டஆட்சியர்,
“தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், இராமாபுரம் சரகம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் எட்டு திசைகளிலும் காவல்புரியும் அஷ்டசக்திகளுள் கீழ்திசையின்கண் புற்றுருவமாய் நின்று அருள்புரியும் சக்தி ஸ்தலம் .
இத்திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு விழா 10.02.2025 (இன்று) நடைபெற உள்ளதால், திருக்குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 10.02.2025 (இன்று) தஞ்சாவூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.02.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக கருதப்படும்.”
என அறிவிவித்துள்ளார்.