மும்பை:

வைர வியாபாரி நிரவ் மோடி மீதான மோசடி வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மும்பை பிராடி ஹவுஸ் கிளையின் 3 அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து சிபிஐ கைது செய்துள்ளது. இவர்கள் வீடுகளிலும் சோதனையும் நடந்தது.

இதில் கம்ப்யூட்டர்களில் இருந்து சில தகவல்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நிரவ் மோடி துபாயில் தலைமறைவாக இருப்பதாக வெளியான தகவலை அவரது வக்கீல் மறுத்துள்ளார்.