டெல்லி: லோன் மோசடி காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட,  ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை சிபிஐ கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர் சாந்தா கோச்சார். இவர் 2009 முதல் 2011 வரையில் தலைமை அதிகாரிழகு  பதவியில் இருந்தபோது, பிரபல டிவி தயாரிப்பு நிறுவனமான வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. பின்னர் அந்த தொகையானது வீடியோக்கான் நிறுவனத்தில் இருந்து சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்துக்கு பல கட்டங்களாக மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  கடன் முறையாக செலுத்தாத வீடியோகான் கடனை  திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதனை தொடந்து வீடியோகான் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஏற்கனவே சாந்தா கோச்சாரை கைது சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில்,  லோன் மோசடி வழக்கு தொடர்பாக மீண்டும்  சாந்தா கோச்சாரையும், அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.