லண்டன்: பிரீமியல் லீக் கால்பந்து தொடரில், கோப்பை வென்று அசத்தியுள்ளது லிவர்பூல் அணி.
உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்தன. இத்தொடரில், புள்ளிகள் அடிப்படையில் லிவர்பூல் அணி ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்துவிட்டது. அதேசமயம், தனது கடைசி லீக் போட்டியில் செல்ஸி அணியுடன் மோதியது.
இப்போட்டியில், லிவர் பூல் அணி 5-3 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த அணி மொத்தம் 37 போட்டிகளில் விளையாடி 96 புள்ளிகளைப் பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த அணி வென்ற 19வது பிரீமியர் லீக் கோப்பையாகும் இது. மேலும், 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லிவர்பூல் அணி வெல்லும் பிரீமியர் லீக் கோப்பையாகும் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.