டெல்லி:  மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர்  மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5ந்தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதன்மீதான  விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து நீதிமன்றக் காவலில் சிசோடியவை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.