சென்னை:

தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கைப்பார்க்கும் மனிதர்களே அதிகம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று என நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மைய்யம் என் ற பெயரில் புதிய கட்சி யை துவக்கிய நடிகர் கமல் தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இரண்டாவது முறையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

“தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதே போல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம். பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். நானும் முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை” என்று அப்பதிவில் கமல் தெரிவித்துள்ளார்.