மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

george

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ம த்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1977 முதல் 2009 வரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் 9 முறை அதன் உறுப்பினராகவும், தொழில், ராணுவம் மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளின் இருந்து வந்தார். அதுமட்டுமின்றி அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளையும் கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று டெல்லியில் காலாமானார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மோடியின் இரங்கல் பதிவில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார். அவரைப்பற்றி
நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராக தெரிகிறார். அவரது மறைவு எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் தனது இரங்கலை பெர்னாண்டஸ்க்கு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ரவ், காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூ, பிரியங்கா சதுர்வேதி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.