சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது வழங்கி உள்ளது. இந்த விருதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தலைநகர் டெல்லியில் 4.7.2022 அன்று ஒன்றிய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத் தற்காக தமிழ்நாட்டிற்கு லீடர் விருது வழங்கப்பட்டது.  முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையில் இருந்து தற்போது “லீடர்” நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது என்பதை கவரவித்து விருது வழங்கப்பட்டு உள்ளது.

இந்த லீடர் விருதை சென்னை தலைமைச் செயலகத்தில்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதலமைச்சர் ஸ்டாலிடம்  காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர்  வி.அருண்ராய் இ.ஆ.ப. தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய நில நிர்வாக ஆணையருமான எஸ். நாகராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரும், தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியருமான  சஜீவனா, இ.ஆ.ப., தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.