திருவாரூர்: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறினார்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மாபெரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக, “அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கை கோர்ப்போம்” என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்து மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் திருவாரூர், தெற்கு வீதியில் உள்ள ஏ.கே.எம். மஹாலில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  ’மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார். ஆனால் நாடு வீழ்ந்து கிடக்கிறது. அதானி குறித்து சர்வதேச நாடுகள் கூட இதனைக் கண்டித்தும் மோடி வாய் திறக்காமல் இருக்கிறார்.அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும்.  ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாள ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது என்றவர், இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஒன்றரை வருட திமுக ஆட்சிக்கு சான்றிதழ் வழங்கும் தேர்தலாக அமையும். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது அதனால் சட்ட ஒழுங்கும் சிறப்பாக உள்ளது’ என கூறினார்.‘

’’தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதால் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’ என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக கே.எஸ்.அழகிரி கும்பகோணம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘