டெல்லி: ஆதார் அட்டையில் இனி திருத்தங்களை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று  என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் அட்டையை வழங்கும் இந்த அரசு அமைப்பானது கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் முடங்கிய மக்கள் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்ய இந்த ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது. இனி வீட்டில் இருந்தவாறே ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, மொழி போன்றவற்றை திருத்தம் செய்யுமாறு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஆதாருடன் இணைத்துள்ள அதிகாரப்பூர்வமான தொலைபேசி எண் பயன்படுத்தப்பட வேண்டியது கட்டாயம். அதில் வரும் ஓடிபியை கொண்டு மாற்றங்களை செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.