சென்னை,

டிகர் லதா ரஜினிகாந்த் சென்னை பெருநகர மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எதுக்கு தெரியுமா? தான் மாநகராட்சி கட்டிடத்தில்  நடத்தி வரும் டிராவல் ஏஜன்சி  கடைக்கு வாடகையை உயர்த்தியதால், அதை கொடுக்க பணம் இல்லை என்று கூறி பிரபல நடிகரான மனைவி லதா ரஜினிகாந்த் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மோடி அரசின் பண மதிப்பிழப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு எதிராக, ஜிஎஸ்டி காரணமாக தனக்கு வருமானம் குறைந்துள்ளது அதன் காரணமாக வாடகை செலுத்த முடியாது என சென்னை மாநகராட்சிக்கு எதிராக வழக்கு போட்டுள்ளார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த்.

சமீபத்தில், வாடகை பாக்கி தராததால் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளிக்கு கட்டிட உரிமையாளர்  பூட்டு போட்டதும், பின்னர் நீதிமன்றம் தலையிட்டு பள்ளி திறக்க வைத்ததும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பள பாக்கிக்காக போராடிய பள்ளி ஊழியர்கள்

இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி மீது வாடகை பாக்கி செலுத்த முடியவில்லை என்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் ஒரு கடை லதா ரஜினிகாந்த் வாடகைக்கு எடுத்து டிராவல் ஏஜன்சி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக பல ஆண்டுகளாக  சென்னை மாநகராட்சி  ரூ.3,702 (மூவாயிரத்து எழுநூற்றி இரண்டு) மட்டுமே வசூலித்து வந்துள்ளது.

தற்போது அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் பரிவர்த்தனை காரணமாக கடைகளின் வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

அதன்படி தற்போதைய நிலவரப்படி கடைக்கு வாடகை மாதம் ரூ.21,160 கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் மோகன் மேனன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள பண மதிப்பிழப்பு , ஜிஎஸ்டி காரணமாகவும் தங்களது வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எங்களின் வருமானம் குறைந்துள்ளது. எனவே, வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி உள்ளார்.

லதா ரஜினிகாந்தின் கணவர் நடிகர் ரஜினிகாந்த், மோடி அறிவித்துள்ள பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை குறித்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அவரது மனைவி லதா இதன் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகரின் மனைவி இதுபோன்று வாடகை கட்ட முடியவில்லை என்று வழக்கு தொடர்ந்திருப்பதும், அவரது ஏமாற்றும்  மொள்ள மாரித்தனம் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்துக்கு 80 கோடி வாங்குறாரு…. நீங்க நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாடகையே குடுக்குறதில்ல…  வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என்று புகார் உள்ளது.

இந்நிலையில், பிரபலமான ஒரு இடத்தில் குறைந்த வாடகை கொடுத்து அரசை ஏமாற்றி வந்த லதா ரஜினிகாந்த், தற்போது வாடகை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு போட்டிருப்பது அதிகபட்ச ஆசை என்றும் அராஜகம் என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது.

இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வரும் லதா, தனது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியிருந்தை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், லதாவின் லட்சனம் அனைவரும் தெரிந்துள்ள நிலையில், அவரது கணவர் அரசியலுக்கு வந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்…

ரஜினிக்கு லதா போன்ற மனைவி இருக்கும்வரை அவர் அரசியலுக்கு வந்து கிழிக்க போறாரு என்று பதிவிட்டுள்ளார்கள்.