டில்லி

டந்த நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% அதிகரித்துள்ளது.

ஆண்டு தோறும் தொடர்ந்து இந்தியாவில் ஆ ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த 017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்குக் கீழ் இருந்து வந்தது   ஆயினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்குப் பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றி மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடியாக உள்ளது.  சென்ற ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. எனவே அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்குக் கூடுதலான ஜி.எஸ்.டி. வசூலை, தொடர்ந்து 9-வது மாதம் ஆக ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.  ஆயினும் அக்டோபர் மாதம் வசூலான ரூ.1.72 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

இந்த 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.