டில்லி

ந்தியாவில் 6,33,867 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,528 பேர் அதிகரித்து மொத்தம் 4,30,04,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 149 அதிகரித்து மொத்தம் 5,16,281 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 3,997 பேர் குணமடைந்து இதுவரை 4,24,58,543 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 29,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று இந்தியாவில் 15,77,783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 180,97,94,588 ஆகி உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவுவதால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,33,867 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 78,18,58,171 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 37,406 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,51,56,414 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.