டில்லி

ந்தியாவில் 2,39,751 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,866 பேர் அதிகரித்து மொத்தம் 4,39,05,621 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 41 அதிகரித்து மொத்தம் 5,26,07 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 18,143 பேர் குணமடைந்து இதுவரை 4,32,28,670 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,50,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று இந்தியாவில் 16,82,390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்தம் 202,17,66,615 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவல் குறைந்துள்ள போதும் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,39,751 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 87,27,59,815 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 34,966 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,79,26,919 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.