சென்னை:

மிழகத்தில்  ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,280 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை ரூ.3.33 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி செல்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் வகையில், காவல்துறையினர் பல முறை எச்சரித்தும் பொருட்படுத்தாத நிலையில், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,34,549 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,280 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊரடங்கை மீறியதாக 2,84,861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8678 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.

இதுவரை 3,16,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.3.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனபே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.  வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.