பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தந்தையானார், இன்று காலை பிறந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் தனது பேத்தியைக் காண இன்று மாலை மருத்துவமனைக்கு வந்தார்.

தங்கள் வீட்டின் புதிய உறுப்பினரை பார்த்த சந்தோசத்தில் இருந்த லாலு பிரசாத் பேத்தியை மடியில் தூக்கி வைத்து விளாயாடினார்.

“குழந்தைகள் நமது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுபவர்களாக உள்ளனர், இந்த தருணம் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவிற்கு சிறுநீரகம் தானம் செய்த அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி யாதவின் மகள் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.