பாட்னா
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாவ் யாதவின் திருமணத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக சிறையில் இருந்து வந்துள்ள லாலு மிகவும் உற்சாகத்துடன் திருமண விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். மணமக்கள் தேஜ்பிரதாப் யாதவ் மற்றும் மணமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு பீகார் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலர் திருமணத்துக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங்,சஞ்சய் நிருபம், ஆகியோரும் பிரபுல் படேல், தரிக் அன்வர், சரத் யாதவ், அஜித் சிங் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அவர் மனைவி டிம்பிள் யாதவ், ஜார்கண்ட் அமைச்ச்ர் சார்யு ராய், மராட்டிய முன்னாள் முதல்வர் கிருபாசங்கர் உள்ளிட்டோரும் வந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.