துறையூர்

17 வயது மாணவனை திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யபட்டுள்ளார்.

திருச்சி அருகே உள்ள துறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவரை கடந்த 5-ம் தேதி முதல் காணவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  காவல்துரை விசாரணையில் அதே தினத்தன்று  அந்தப் பள்ளியில் பணியாற்றிய சிக்கத்தம்பூரைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை காணாமல் போனது தெரிய வந்தது.

மேலும் நடந்த விசாரணையில், மாணவரும் அவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளது தெரியவந்தது. இதையொட்டி அந்த ஆசிரியையின் செல்போனை போலீஸார் கண்காணித்தபோது, இருவரும் திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் இருப்பது தெரியவந்தது. ,

காவல்துறையினர்  நேற்று முன்தினம் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.  ஆகவே  17 வயது மாணவரை கடத்தி திருமணம் செய்ததாக ஆசிரியை சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். அந்த மாணவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.