சென்னை

மிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

இன்று தமிழகத்தில் 31,797 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,53,89,956 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,52,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.இன்று 71 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,14,075 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 24 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,41,732 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 6 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 2 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.