Untitledயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.
பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் தற்போது சென்னை கோடம்பாக்கம் மிட்வே மருத்துவமனையில் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவரது சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கவிஞர்க குமரகுரபரன், குமுதம், தினமலர், விண்நாயகன் இதழ்களில் பணிபுரிந்தவர். இவர்  தனக்கு வழங்கப்பட இருந்த ராஜமார்த்தாண்டன் விருதை இந்தியாவெங்கும் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்களுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணம், வாங்கும் முன்னே மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.