சென்னை:  கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுகவும் 66தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, திமுக வேட்பாளர் செங்குட்டுவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்ட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி  பி.டி.ஆஷா, வாக்கு எண்ணிக்கையின்போது,  நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இதற்கென ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும் அதேபோல் தேர்தல் ஆணையமும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேழம்,  இந்த நடவடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன்  நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் குறித்தும், அது ஏன் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்