கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே ஆர் பி அணை முழுவதும் நிரம்பி விட்டதால் சுற்றி உள்ள மாவடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது.

தமிழகம் எங்கும் தற்போது கனமழை பெய்து வருகிறது    பல ஏரிகளும், குளங்களும் நிரம்பத் தொடங்கி உள்ளன.   கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள கே ஆர் பி அணையானது தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.   அதன் முழுக் கொள்ளளவு 2 டி எம் சி ஆகும்.    மழை காரணமாக மேலும் அணைக்கு நீர் வந்துக் கொண்டுள்ளது.

இந்த அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, மற்றும் சுற்றுப்புற மாவடங்களான தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஆற்றின் கரையோரம், மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான இடங்களுக்கு செல்லவும்,  யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.