சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு புதியதாக  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.148 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் இன்று ஒரேநாளில், மேலும் 5,415 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை  24,60,747 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்  314 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை  3,21,88,107 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும்   1,70,963 சோதனைகள்  செய்யப்பட்டு உள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 7,661 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 23,83,624 பேர் தொற்றின் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர்.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இனறு மட்டும்  148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 32,199 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடர்கிறது. அங்கு 671 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து,  ஈரோட்டில்  574 பேரும், சேலம்த்தில் 369 பேரும்,  திருப்பூரில் 337 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.