சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,60,747 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 314 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 148 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,199 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 7,661 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,83,624 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,70,963 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,21,88,107 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 44,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 314 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 53,14,43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8152 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 328 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், துவரை 51,97,01 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் சென்னையில், 3590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 57
செங்கல்பட்டு 254
சென்னை 314
கோயம்புத்தூர் 671
கடலூர் 127
தர்மபுரி 112
திண்டுக்கல் 50
ஈரோடு 574
கள்ளக்குறிச்சி 140
காஞ்சீபுரம் 78
கன்னியாகுமரி 93
கரூர் 52
கிருஷ்ணகிரி 122
மதுரை 92
நாகப்பட்டினம் 78
நாமக்கல் 214
நீலகிரி 128
பெரம்பலூர் 31
புதுக்கோட்டை 72
ராமநாதபுரம் 31
ராணிப்பேட்டை 88
சேலம் 369
சிவகங்கை 79
தென்காசி 40
தஞ்சாவூர் 260
தேனி 56
திருப்பதூர் 38
திருவள்ளூர் 134
திருவண்ணாமலை 151
திருவாரூர் 68
தூத்துக்குடி 58
திருநெல்வேலி 47
திருப்பூர் 337
திருச்சி 198
வேலூர் 60
விழுப்புரம் 75
விருதுநகர் 67