கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு  குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்பைடயினர், ஜெயலலிதாவின்  தோழி சசிகலா, முன்னாள் அதிமுக  எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட அதிமுக பிரமுகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என 210-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து, அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவன் அவரது தம்பி சிபி மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கடந்த வாரம்  தனிப்படை  ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.