சென்னை

டிகர் விஜய்க்கு வழங்கபட்டுள்ள பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறி விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க  உத்தரவிட்டது குறித்து அரசியல் தலவர்கள் பவ்வேறு விமன கருத்துக்களைக் கூறி வருகின்றனர்/

நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம்,

”சினிமா துறையில் விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு தேவை இருக்கிறது. தற்போது அவர் அரசியலில் இருப்பதால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.”

என்று தெரிவித்துள்ளார்.