திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது.

அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கேரள பொதுக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

அதன்பின் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் 2023ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ஆம் தேதி துவங்கி மார்ச் 3-ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி துவங்குகிறது. அத்துடன் 12ஆம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3ம் தேதி துவங்கும். பின் தேர்வு முடிவுகள் மே 25-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.