கண்ணூர்: கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தின் கண்ணூரில் அமைந்துள்ளது, கண்ணூர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை, அதற்காக நியமிக்கப்பட்ட கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது.

இதையடுத்து, முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான  பகுதிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக  திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இடம் பெற்றுள்ளன. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில், சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.