திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்-க்கு திடீர் நெஞ்சவலி ஏற்பட்ட காரணத்தால், அவர் உடடினயாக திருச்சூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.

கேரள மாநில அரசியல் புரட்டிப்போட்டுள் ள தங்கக்கடத்தல் சம்பவத்தில், கேரள மாநில அரசின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இரும்பு குழாய்களில் மறைத்து, கேரளாவில் உள்ள அதன் தூதரக முகவரிக்கு கடத்தப்பட்டது. இதனை கண்டறிந்த சுங்க பிரிவு போலீசார் இக்கடத்தலில் ஈடுபட்ட தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வரின் செயலராக இருந்து நீக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருடன் உறவை ஏற்படுத்தி கொண்டு பல மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சிவசங்கரின் ஆதரவுடன் அவர் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவன உயர்அதிகாரியாக பதவியை பெற்றிருந்ததும் தெரிய வந்தது.

இந்த விவகாரம் மாநிலத்தில் பூகம்பத்தை எழுப்பியுள்ள நிலையில்,  கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ்க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறை அதிகாரிகள்,. அவரை திரிச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது ஈசிஜியில் சிறிய வேறுபாடு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார். இருப்பினும் அவர் உடல்நிலை மோசமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.