யில் இறகை வீட்டில் வைப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தமிழ்க்கடவுள் முருகனின் வாகனமான மயில் உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருந்து துஷ்ட சக்திகளை அழிக்கும்.

கிராமப்புறங்களில் சிறுவர் சிறுமியர்களிடையே மயில்இறங்கை பள்ளிப் பாடப்புத்தகங்களில்  மறைத்து வைத்து, அது எப்போது குட்டி போடும் என எதிர்பார்த்து, எதிர்பார்த்து காத்திருப்போம்.. ஆனால், அது குட்டிப்போடாது… இருந்தாலும் அதனால் கிடைக்கும் ஆனந்தம், நமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் பலரும்,  மயில் இறகை புனிதமானதாக கருதி, தங்களது பூஜை அறைகளில் வைத்து பூஜிப்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால்,  இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் சக்திகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு வீட்டின் வாஸ்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் மயில்இறகுக்கு தனிப்பங்கு இருப்பதாக ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் போதும். எந்தவொரு வாஸ்து நிபுணர்களும் தேவையில்லை.

அதுபோல, சனி தோஷம் நீங்குவதற்கும் மயில் இறகு பணியாற்றி வருகிறது.  மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி,  ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என பூஜித்தால் சனி பகவானின் தாக்கம் வெகுவாக குறைந்து விடும்.

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் செல்வம் சேரும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

முயற்சித்துதான் பாருங்களேன் அன்பர்களே…