சென்னை

மிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க முடியாது  எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறி உள்ளார்.

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தன் வரலாற்று நூல் முதல் பாகம் வெளியிடப்பட்டது.  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.  முதல் பிரதியைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து நடிகர் சத்யராஜ்,  டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிடோர் பங்கேற்றனர்.  முதல்வருக்கு காஷ்மீர் கம்பளம் ப்ரிசளித்த  உமர் அப்துல்லா சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர், “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் ஆவார். அவர் தனது செயலால் மக்கள் மனதில் நிற்கிறார்.  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அவரைப் பற்றிய மக்களின் மனநிலையை எதிரொலித்துள்ளன

காஷ்மீர் தமிழகத்திலிருந்த வெகு தொலைவில், காஷ்மீருக்காகத் தமிழகம் குரல் கொடுத்து. தோள் கொடுத்து நின்றதை மறக்கமாட்டோம்.  இவ்விரு மாநிலங்களுக்கும் நெருங்கிய  தொடர்பு உள்ளது என்பதால்தான் நான் இங்கு நிற்கிறேன். இந்தியா முழுவதும் தமிழகத்தின் பல கொள்கைகள் பரவி உள்ளன.

நமது இந்தியா மிகப் பெரிய வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. மக்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ன அணிய வேண்டும், இஸ்லாமியராக இருப்பவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதாவது ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் கடவுளுக்கும் நமக்குமானது.

காஷ்மீரில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்காமலேயே எங்கள் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.  இதுவரை இந்திய வரலாற்றில் எங்குமே இதுபோல நடந்திருக்காது” எனத் தெரிவித்தார் .