ஸ்ரீநகர்:

இந்திய எல்லையன ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.

எல்லையில் பயங்கரவாத தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் சில காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாக்குதல் நடக்கும் பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாலகோட், மன்கோட் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.