
இந்த விழாவானது, நாளை (செவ்வாய்கிழமை) ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆலய விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆலய விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி. சந்தீஷ் மற்றும் அதிகாரிகள . ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , குடியரசுத் துணைத் தலைவர் சாலை மார்க்கமாக வரும்போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மண்டபம் ஹெலிபேட்டிலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சிக்கான மேடையை வந்தடைந்ததும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.
விழா முடிந்தும், மீண்டும் அவர் புறப்பட்டுச் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 29, 30-ம் தேதிகளில் (இன்றும் நாளையும்) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]