அமீர் இயக்கிய பருத்தி வீரன், படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கார்த்தி.

அதில், “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’.

இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.