மைசூரு:

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு பள்ளி அருகேமனித எலும்புக்கூடு புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலம் மைசூரு யோக நரசிம்மர் சாலை விஜயாநகர் பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்று உள்ளது. இதையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டிய போது குவியல் குவியலாக மனித எலும்புக்கூடுகள் இருந்துள்ளது.

இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து மைசூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அங்கிருந்த மொத்தம் 13 மனித எலும்புக்கூடுகளை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்க அனுப்பி வைத்தனர்.